மலைச்சாலைகளில் பாதுகாப்பாக கார் ஓட்டிச் செல்வதற்கான வழிகாட்டு முறைகள்!

கோடை விடுமுறை துவங்கிவிட்டது. படித்து ஓய்ந்திருக்கம் குழந்தைகளை காரில் வெளியூர் கூட்டி செல்வதற்கான திட்டங்களில் மண்டையை போட்டு குடைந்து கொண்டிருப்பீர்கள். அதிலும், கோடை வெயிலை சமாளிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களுக்கு செல்ல பலர் திட்டம் போட்டு வைத்திருப்பீர்கள்.
இந்த நிலையில், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பாங்கான ஊர்களுக்கு காரை சொந்தமாக ஓட்டிச் செல்லும்போது மிக கவனமாகவும், பாதுகாப்பாகவும் செல்வது அவசியம். அதிலும், முதல்முறையாக மலைச்சாலைகளில் காரை ஓட்டிச் செல்பவர்கள் மிக கவனமாக செல்ல வேண்டும்.
சாதாரண சாலைகளில் நன்றாக கார் ஓட்டத் தெரிந்திருந்தாலும், மலை சாலைகளில் கார் ஓட்டும்போது சில கூடுதல் யுக்திகளை தெரிந்து வைத்து கொள்வது நல்லது. இதுபோன்று மலைப்பாங்கான சாலைகளில் கார் ஓட்டிச் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய சில விஷயங்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.


1. ஏற்றமான சாலை
மலையில் ஏறும்போது சரிவான சாலையில் காரை நிறுத்தி, கிளப்பும்போது கிளட்ச், பிரேக், ஆக்சிலேட்டரை கன்ட்ரோல் செய்து காரை கிளப்புவது சற்று கடினமாக இருக்கும். அப்போது ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி காரை நகர்த்துங்கள். ஆஃப் கிளட்ச் வைத்து ஓட்டத் தெரிந்தாலும், ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி செல்வது மிக பாதுகாப்பாக இருக்கும்

2. சரியான கியர்...

மலையில் ஏறும்போதும், இறங்கும்போதும் குறைவான கியரில் வைத்து இறக்குவது நல்லது. மேலே ஏறும்போது எந்த கியரில் செல்வீர்களோ அதே கியரில் இறங்க வேண்டும் என்பதுதான் சூட்சுமம். அதாவது பிரேக் பயன்படுத்துவதை குறைத்து எஞ்சின் வேகத்தை கட்டுப்படுத்தி(எஞ்சின் பிரேக்கிங்) காரை இறக்க வேண்டும்.அதிக டார்க் கிடைக்கும் என்பதால், கார் தரையுடன் அதிக பிடிமானத்துடன் செல்லும். பிரேக்குக்கான வேலை சற்று குறையும். இறங்கும்போது நியூட்ரல் கியரில் வைத்து இறக்குவதை அறவே தவிர்க்கவும்

3. எந்த கியர் சரி?

குறைந்த சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களை 2வது கியரில் வைத்தும், அதிக சிசி திறன் எஞ்சின் கொண்ட கார்களை 3வது கியரில் வைத்து கீழே இறக்கவும். சில கார்கள் அதிவேகத்தில் கட்டுப்பாடு இல்லாமல் அதிக இடத்தை ஆக்கிரமித்து இறங்கி செல்வதை பார்த்திருப்பீர்கள். அதற்கு காரணம், சரியான கியரில் இயக்காமல் டாப் கியரில் வைத்து காரை இறக்குவதே காரணம். இதுபோன்று இறக்கும்போது காரை கட்டுப்படுத்துவது மிக கடினம். குடும்பத்துடன் செல்லும்போது அது ஆபத்தை விலை வாங்கும் விஷயமாகவே இருக்கும்.

4. ஓவர்டேக்

சமதள சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓவர்டேக் செய்வது போன்று மலைச்சாலைகளில் ஓவர்டேக் செய்வதை அறவே தவிருங்கள். வளைவுகள் நிறைந்த மலைச்சாலைகளில் ஓவர்டேக் செய்வதை தவிருங்கள். டிரக் போன்ற கனரக வாகனங்கள் மெதுவாக முன்னே சென்று கொண்டிருந்தால், ஓவர்டேக் செய்வதற்கு போதிய இடைவெளி உள்ள சாலை வரும்வரை பின்தொடர்ந்து செல்லுங்கள். வளைவுகளில் ஓவர்டேக் செய்வதையும் தவிர்த்துவிடுங்கள்.

5. ஹாரன் அவசியம்

கூர்மையான வளைவுகளில் ஹாரன் அடித்து எச்சரிக்கை செய்வது அவசியம். எதிரில் வரும் வாகனம் ஹாரன் அடித்தால், நீங்களும் பதிலுக்கு ஹாரன் அடித்து எச்சரிக்கை செய்யுங்கள். மேலும், வாகன வேகத்தையும் குறைத்து போதிய இடைவெளி விட்டு பாதுகாப்பாக காரை வளைவில் திருப்பவும்.

6. வழி விடுங்கள்

பொதுவாக மலைச்சாலைகளில் செல்லும்போது மேலே ஏறும் வாகனங்களுக்கு வழி விடுவது அவசியம். இது எழுதப்படாத விதியும் கூட. எதிரில் வாகனம் வரும்போது காரின் வேகத்தையும் குறைத்துவிடுங்கள்.

7. காரை நிறுத்தும்போது...

மலைச்சாலையில் காரை நிறுத்தும்போது வாகனங்கள் கடந்து செல்ல போதிய இடைவெளி உள்ள இடத்தில் காரை நிறுத்துங்கள். ஹசார்டு லைட்டையும் போட்டு வைக்கவும். சில வேளைகளில் காரை மலைச்சாலையில் சரியான இடத்தில் நிறுத்தவில்லையெனில், விபத்துக்கள் நேரும் ஆபத்து இருக்கிறது.

8. தடுப்புச் சுவர் இல்லையா..

சாலையின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் இல்லையென்றால் மிக கவனமாக செல்ல வேண்டும். எதிரில் வாகனங்கள் வருவது தெரி்ந்தால் முன்கூட்டியே பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வழிவிட்டு செல்வது புத்திசாலித்தனம். முன்னேறிச் செல்லக் கூடாது.

9. தடம் மாறாதீர்

மலைச்சாலையில் செல்லும்போது இடதுபுறத்திலேயே காரை ஓட்டுங்கல். பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதத்தில் தாறுமாறாக ஓட்டிச் செல்லாதீர். வளைவுகளில் கட் அடித்து சாகசம் செய்யவும் வேண்டாம். இது உயிரை நொடியில் பறிக்கும் அபாயம் உண்டு.

10. எக்ஸ்ட்ரா வேண்டாம்

கூடுதல் நபர்களை ஏற்றிச் செல்லக்கூடாது. குழந்தைகளை அழைத்துச் சென்றால் சைல்டு சீட்டில் உட்கார வைத்து அழைத்து செல்லுங்கள். நீங்களும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய மறவாதீர்.

11. எச்சரிக்கை பலகை

சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை பலகைகளில் இருக்கும் எச்சரிக்கைகளை பார்த்துக் கொள்வது அவசியம். மேலும், எச்சரிக்கை பலகையில் குறுகிய வளைவு, சிறிய பாலங்கள் இருப்பது தெரிந்தால் கண்டிப்பாக ஓவர்டேக் எடுக்கக் கூடாது.

12. கையில் எமன்

இப்போது மொபைல்போன்தான் கார் ஓட்டிகளுக்கும், சாலையில் செல்பவர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. குறிப்பாக நமது ஐடி துறைகளில் இருக்கும் நமக்குதான் அதிக தொலைபேசி அழைப்புகள் வரும் அதை தவிர்க்க கார் ஓட்டும்போது மொபைல்போனில் பேசுவதையும், குறுந்தகவல் டைப் செய்வது, அனுப்புவதையும் தவிர்த்துவிடுங்கள். குறிப்பாக, மலைச்சாலையில் கார் ஓட்டும்போது மொபைல்போன் பேசுவதை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள்.

13. பயணம் சிறக்க வாழ்த்துகள்

ஸ்லைடரில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு முறைகளை பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களது பயணம் சிறக்க வாழ்த்துகள்.

ஆன்லைன் ஷாப்பிங் செய்வேரா நீங்கள்? உஷார்.


நீங்கள் ஆன்லைனில் டிரெஸ் வாங்கும்போது முதல்ல அளவு பிரச்சனை வரக்கூடும். ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒவ்வொரு அளவு இருக்கும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் அளவுகள் வித்தியாசமாகத்தான் இருக்கும். நீங்கள் டிரெஸ் ஆர்டர் செய்றதுக்கு முன்னாடி அந்தப் பொருளைப் பற்றி மற்ற வாடிக்கையாளர்கள் தங்களோட அனுபவங்களை பற்றி சொன்னதை பாருங்க.. அதுல குறிப்பாக அளவுகளைப் பற்றி என்ன சொல்லியிருக்காங்கனு பாருங்க..

அப்புறம் ஆன்லைன் மூலமாக நீங்கள் வாங்குற பொருள் பயன்படுத்தியதாகக் கூட இருக்கலாம், அல்லது மோசமான கண்டிஷன்ல இருக்கலாம் அல்லது டேமேஜாகியும் இருக்கலாம். பெரும்பாலும் இந்த மாதிரி அனுபவங்கள் ஏற்படாத வகையில் நல்லா ஆராய்ந்து ரிட்டர் செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கா? அது ப்ரீயா? அல்லது பணம் கட்டணுமா? என்றெல்லாம் யோசிச்சுதான் ஆன்லைனில் ஆர்டர் செய்யனும்

மறைமுக கட்டணம்


Plan to shop online during the holiday season? Watch out for scams
எப்போதாவது நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்தீங்கன்னா டெலிவரி சார்ஜஸ்..அது இதுன்னு ஏகப்பட்ட கட்டணம் கறக்கப்பட்டுவிடும்... அதனால ஷிப்பிங் கட்டணம் என்னனு முழுமையாகத் தெரிஞ்சக்கனும். ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே ஷிப்பிங் கட்டணம் எவ்வளவு? மொத்தமாக அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே ஷிப்பிங் கட்டணம் எவ்வளவுன்னு நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் டிஸ்கவுண்ட்ஸ் பற்றியும் கூப்பன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளனும். அதேபோல் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸையும் நல்லா தெரிஞ்சு வைச்சுக்குங்க..அதேபோல் பொருட்களை ரிட்டர்ன் கொடுக்கிறதை பற்றியும் அவசியம் தெரிஞ்சக்கனும்.. ஒருவேளை நீங்கள் ஆர்டர் கொடுத்துட்டு அப்புறம் மாற்ற முடியாமல் போய் கேன்சலும் செய்ய முடியாமலும் போகலாம். அதனால ஆன்லைன் ஷாப்பிங்கைப் பொறுத்தவரை அவசரப்பட வேண்டாம்..அதே மாதிரி ஆர்டர் பட்டனை தட்டும்போது கவனமாக இருங்க.. பொறுமையாக செயல்படுங்க.. நீங்க பாட்டுக்கு 2 தடவை ஆர்டரை தட்டிவிடப் போய் பில்லும் 2 முறை வந்துடும்..அதனால ரொம்ப கவனமாக ஆன்லைன் ஆர்டர் செய்யனும்.

கட்டணம் செலுத்துதல்
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் முடிவை எடுத்துட்டீங்கன்னா முதலில் பேமெண்ட் செலுத்துற வெப்பேஜ் எப்படி இயங்குதுன்னு பாருங்க.. பெரும்பாலும் ஆன்லைன் கட்டணங்கள் செலுத்தும் பக்கங்களில் ப்ரிவியூ ஆப்சன் இருக்கும். சப்மிட் ஆப்சனை கிளிக் செய்யுறதுக்கு முன்னாடி நல்லா பர்வியூவை பார்த்துக்குங்க... ப்ரிவியூ ஆப்சன் இல்லையா..? பேசாம வேற வெப்சைட் பக்கம் தாவிடுங்க.. அதுதான் பெஸ்ட்

அதேமாதிரி கரென்சி ரேட் என்னங்கிறதையும் ரொம்பவும் கவனமாக பார்த்துங்க..இணையத்துல எல்லா நாட்டு பணத்துக்கும் நம்ம பணத்துக்குமான மதிப்பு இருக்கும். இதுக்காகவே நிறைய கரன்சி கன்வெர்ட்டர்ஸ் இருக்கு... நீங்கள் ஆன்லைனில் பர்சேஸ் செய்யும் போது கரன்சி கன்வெர்சனுக்கு எவ்வளவு கட்டணமாகுதுங்கிறதையும் ஒப்பீட்டு பார்த்துக்கொள்வது நல்லது.

பெரும்பாலும் ஆன்லைன் நிறுவனங்கள் அனைத்துமே கொஞ்சம் கூடுதலாகவேத்தான் கன்வெர்சன் ரேட் பிக்ஸ் செய்துள்ளன என்பதை கவனத்தில் வைக்கனும்...

டெலிவரி டைம்
உலகத்தோட எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் ஆர்டர் செய்துவிடலாம்..ஆனால் அவங்க டெலிவரி கொடுக்க எவ்வளவு டைம் எடுத்துக்குவாங்கன்னு அவசியம் தெரிஞ்சக்கனும்..உங்ககிட்ட ஆப்சன் கேட்டால் ரொம்ப கவனமாக டெலிவரி டைமை தேர்வு செய்யுங்கள்... அதுல உங்களுக்கு சந்தேகம்னா அந்த இணையதளத்தில் இருக்கிற நபர்களுக்கு மெயில் அனுப்பி விசாரிச்சக்கனும்.. கொஞ்சம் பெரிய அளவுக்கு பர்சேஸ் பண்றதுன்னு முடிவு செஞ்சிட்டா முதலிலேயே மெயில் போட்டு விசாரிச்சுட்டு அவங்ககிட்ட இருந்து பதில் வந்ததுக்கு பிறகு ஆர்டர் கொடுக்கலாம்.. இல்லையா அடுத்த வெப்சைட்டைப் பார்க்கலாம்..

மோசடிகள்
பொதுவாகவே ஆன்லைனில் நடக்கிற கிரெடிட் கார்டு மோசடிதான் ஷாப்பிங் அனுபவத்திலும் ஏற்பட்லாஅம். அதனால் நீங்கள் பயன்படுத்துகிற வெப்சைட் நம்பகத்தன்மைக்குரியதா? என பார்த்து ஆர்டர் செய்யனும்..httpக்கு பதிலாக வெப்சைட்டில் httpsன்னு இருக்கான்னு செக் பண்ணுங்க... வெப்சைட்டில் கீழ சின்னதா ஒரு லாக் குறியீடு இருக்கான்னு பாருங்க...

நீங்க ஆன்லைனில் கிரெடிட் கார்டை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போதும் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருட்டு வளையத்துக்குள்ள சிக்குறீங்க என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும். அதனால உங்க கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களை ஒருபோதும் இ மெயிலில் கொடுக்காதீங்க... அதே மாதிரி தனிநபர்கள் கிட்டவும் கொடுக்காதீங்க... கிரெடிட் கார்டு மோசடியில் பலரகம் இருப்பதால் ரொம்பவே எச்சரிக்கையாக இருங்க..


இதைவிட இன்னும் பெரிய பிராடும் இருக்கு.. வெப்சைட்டில் போட்டிருக்கும் பொருட்கள் கூட போலியாக இருக்கலாம்.. நீங்கள் ஆர்டர் செய்யறேன்னு சொல்லி கிரெடிட் கார்டு தகவல்களைக் கொடுக்க அந்த டுபாக்கூர் ஆட்கள் ஒருபக்கம் கிரெடிட் கார்டு தகவல்களை சுட்டுவிடுவார்கள். இப்படியும் மோசடி நடக்கிறது..உங்களுக்கு பொருளும் வராது.. கிரெடிட் கார்டு தகவலை கொடுத்து லட்சங்களை இழக்க வேண்டியதுதான். அதனால ரொம்பவே அதிகம் பயன்படுத்தக்கூடிய மிகவும் நம்பகத்தகுந்த நிறுவனங்களின் இணையதளங்களை மட்டுமே நம்புவதும் ஆர்டர் செய்வதும் அவசியம்.

ரொம்பவும் நம்பகத்தன்மையான இணையத்தளங்களிலும் கூட முழுமையாக ஆராய்ந்து பார்த்துவிட்டு ஆர்டர் செய்தால் தப்பிப்பீர்கள்.. இல்லையெனில் புலம்பத்தான் செய்ய வேண்டும்
 Thanks to One india.com

பணத்திற்கு நீங்கள் தலைவனாக இருந்தால், அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துங்கள். அதற்கு நீங்கள் அடிமையாக இருந்தால் அது உங்களைத் தீய செயல்களுக்குப் பயன் படுத்திக் கொள்ளும்.

முடங்கிப் போகும் விண்டோஸ் இயக்கம்


முடங்கிப் போகும் விண்டோஸ் இயக்கம்


Computer Problem and Solutions

விண்டோஸ் இயக்கம் நாம் எதிர்பாராத நேரங்களில், தொடர்ந்து இயங்க முடியாமல், முடங்கிப் போகும் வாய்ப்புகள் சில வேளைகளில் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பொதுவாகக் குற்றம் சாட்ட முடியாது. வேறு பல காரணங்களாலும் இது ஏற்படலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.மெமரி மதர்போர்ட் பிரச்னை:

கம்ப்யூட்டர் முடங்கிப் போய், நீல வண்ணத்தில் திரை மாறுவதற்கான காரணங்களில், முதன்மையாக இருப்பது, மெமரி அல்லது மதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளே. இதனை Fatal Exception Error என அழைக்கின்றனர். மெமரியில் ஸ்டோர் செய்யப்பட்ட டேட்டாவினை, மீண்டும் பெற முடியாத பிரச்னையே இது.

2.பயாஸ் செட்டிங்ஸ்:

பொதுவாக மதர்போர்டுகள் தயாரிக்கப்படும் இடத்திலேயே, அனைத்து வகை டிஜிட்டல் இயக்கத்திற்கும், இணைப்பிற்கும் தயாராக இருக்கும் வகையிலேயே வடிவமைக்கப் படுகின்றன. பெர்சனல் கம்ப்யூட்டரில் அவை இணைக்கப் படுகையில், கம்ப்யூட்டர் தயாரிப்பவரால், மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பின் தனிநபராகிய பயனாளரால், அவருக்கான பயாஸ் மெமரியில் இவை பதிவு செய்யப்பட்டு அமைக்கப்படுகின்றன. பயாஸ் மெமரியில் பதிவு செய்யப்பட்டவை, அதற்கு மின் சக்தி வழங்கும் சீமாஸ் பேட்டரியின் மூலம் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும். இந்த பேட்டரி தன் சக்தியை இழக்கும் போது, பயாஸ் தன் பழைய, பேக்டரி செட்டிங்ஸ் நிலைக்குத் திரும்புகிறது. அப்போது, கம்ப்யூட்டரை வடிவமைத்தவர் மற்றும் பயனாளர் அமைத்த செட்டிங்ஸ் இல்லாமல், கம்ப்யூட்டர் மதர்போர்டுக்கும், இணைக்கப் பட்டுள்ள சாதனங்களுக்கும் இடையே இயக்க பிரச்னை ஏற்படுகிறது. மேலும் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், முதலில் சிடி அல்லது யு.எஸ்.பி. ட்ரைவில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தேடி இயங்கட்டும் என செட்டிங்ஸ் அமைத்து, அவற்றில் சிஸ்டம் இல்லை என்றாலும், கம்ப்யூட்டர் பூட் செய்வதில் பிரச்னை ஏற்படும்.

3.விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி:

கம்ப்யூட்டர் இயக்கம் முழுமைக்குமான குறியீட்டு வரிகள் எழுதப்பட்டுள்ள தொகுப்பே விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி. இப்போது இயங்கும் கம்ப்யூட்டர்களில், ரெஜிஸ்ட்ரி தொகுப்பில் முன்பு போல பிரச்னை ஏற்படுவதில்லை. இருப்பினும், இதன் குறியீட்டு வரிகளில் சிக்கல் ஏற்பட்டால், விண்டோஸ் இயக்கம் தொடங்குவதிலும், தொடர்ந்து இயங்குவதிலும் பிரச்னை ஏற்படும். இவ்வாறு பிரச்னைகள் ஏற்பட்டால், சரி செய்வதற்கென பல சாப்ட்வேர் தொகுப்புகள் கிடைக்கின்றன. இவை Registry Fix Software என அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் சரியாக இயங்கவில்லை எனில், அதனைப் பாதுகாப்பான வழியான சேப் மோடில் (Safe Mode) இயக்கி, அதிலிருந்தே புரோகிராம்களை இயக்கிப் பார்க்கலாம்.

4.மாறிப் போன ட்ரைவர்கள்:

ஹார்ட்வேர் சாதனங்கள் எப்படி செயல்பட வேண்டும் என கட்டளை கொடுப்பவை ட்ரைவர் புரோகிராம்களாகும். அவை சரியாக இயங்கவில்லை என்றால், நிச்சயம் விண்டோஸ் இயக்கம் முடங்கிப் போகும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகையில், நமக்கு ஒரு எர்ரர் மெசேஜ் (Error Message) கிடைக்கும். இந்த பிழைச் செய்தியில் எங்கு பிரச்னை உள்ளது எனக் காட்டப்படும். இது புரியவில்லை என்றால், அதனை அப்படியே காப்பி செய்து, கூகுள் தேடல் தளத்தில் ஒட்டி தேடினால், அந்த பிரச்னை குறித்த விளக்கமும், அதனைத் தீர்க்க என்ன செய்திட வேண்டும் என்ற வழிகாட்டலும் கிடைக்கும். அதனைப் பின்பற்றலாம். பிரச்னை தொடர்ந்து ஏற்பட்டால், குறிப்பிட்ட ட்ரைவர் புரோகிராமினை, சிஸ்டத்திலிருந்து நீக்கி, மீண்டும் அதன் மேம்படுத்தப்பட்ட ட்ரைவர் புரோகிராமினைப் பதிவது சரியான தீர்வாகும்.

5. ஹார்ட் ட்ரைவ் தரும் பிரச்னை:

ஹார்ட் ட்ரைவ்களில் ஏற்படும் பழுதுகளால், விண்டோஸ் முடங்கிப் போவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். பயாஸ் புரோகிராம் சரியாக வடிவமைக்கப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டர், ஹார்ட் ட்ரைவில் பூட் செய்யக்கூடிய பகுதியைத் தேடி அறிய முடியவில்லை எனில், இதற்குக் காரணம் ஹார்ட் ட்ரைவாகத்தான் இருக்க முடியும். பொதுவாக, இவற்றில் பதிந்துள்ள பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கும் போதுதான், ஹார்ட் ட்ரைவில் பிரச்னை இருப்பது தெரியவரும். இலவசமாக ஹார்ட் ட்ரைவினை சோதித்து முடிவுகளைத் தரும் புரோகிராம்கள், இணையதளங்களில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி, சோதனை செய்து, கிடைக்கும் அறிக்கையில் தவறு உள்ளது என முடிவு கிடைத்தால், உங்கள் ஹார்ட் ட்ரைவ் தன் மரணத்தைச் சந்திக்க இருக்கிறது என்று பொருள். எப்படியாவது சரி செய்து, அதில் உள்ள டேட்டாவினை மீள எடுத்துவிட்டு, ட்ரைவினை அழித்துவிடுவதே நல்லது. அதற்கு முன், அந்த ட்ரைவினை இன்னொரு கம்ப்யூட்டரில் இணைத்து , இயக்கிப் பார்க்கலாம். அதில் சரியாக இயங்கினால், மீண்டும் சோதனை நடத்திப் பார்த்து முடிவெடுக்கலாம். ட்ரைவ் சரியாக உள்ளது என சோதனை முடிவுகள் தெரிவித்தால், பிரச்னை கம்ப்யூட்டரின் பிற பகுதிகளில் உள்ளதா எனத் தேடிப் பார்க்க வேண்டும்.

6.வைரஸ் அல்லது மால்வேர்:

ஒரு வைரஸ் அல்லது மால்வேர் எனப்படும் கம்ப்யூட்டர் இயக்கத்தினைக் கெடுக்கும் புரோகிராம்களும், கம்ப்யூட்டரை முடக்கிப் போடலாம். இவை ட்ரைவர் புரோகிராம்களைக் கெடுக்கலாம்; அல்லது நீக்கலாம். முக்கியமான சிஸ்டம் பைல்களை அழிக்கலாம்; அல்லது கம்ப்யூட்டர் இயக்கத்தினை நிர்வகிக்க நாம் அமைத்திருக்கும் செட்டிங்குகளை மாற்றலாம். இவை எல்லாமே நாம் எதிர்பாராத நேரத்தில், கம்ப்யூட்டரை முடக்கிப் போடலாம்.
வெளிப்படையாக ஓர் உண்மையைச் சொல்வதென்றால், ஒரு மால்வேர் புரோகிராம் இருப்பதனை அறியும் போதே, அதற்கு எதிரான போராட்டத்தில் நாம் தோல்வி அடைந்து நிற்கிறோம். உங்கள் சிஸ்டத்தினை அது கைப்பற்றிவிட்ட நேரத்திலிருந்து, வழக்கமாக நம் பெர்சனல் கம்ப்யூட்டரின் பிரச்னைகளை அறிய நாம் மேற்கொள்ளும் வழிகளும் அடைப்பட்டுப்போகின்றன. எனவே, புதியதாக ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை, டவுண்லோட் செய்து அல்லது மற்றவர்களிடமிருந்து பெற்று, இன்ஸ்டால் செய்து இயக்கி அதனை நீக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். என்ன செய்தும் அதனை நீக்க இயலவில்லை என்றால், ட்ரைவில் உள்ள பைல்களுக்குப் பேக் அப் எடுத்துவிட்டு, ஹார்ட் ட்ரைவினை பார்மட் செய்து, விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் பதிக்க வேண்டியதுதான். இதனால் தான், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, அவ்வப்போது மேம்படுத்த வேண்டும் என்றும், சரியான பயர்வால் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும் என்றும், நம் டேட்டா பைல்களை அவ்வப்போது பேக் அப் எடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்படுகிறது.

7. மின்சக்தி பிரச்னை:

மேலே சொல்லப்பட்ட பிரச்னைகள் எதுவும் இல்லை என்றால், கம்ப்யூட்டருக்கு வழங்கப்படும் மின்சக்தி ஓட்டத்தில் பிரச்னை இருக்கலாம். போதுமான மின்சக்தி இல்லாத நிலை, சமநிலையில் மின் ஓட்டம் கிடைக்கப்பெறாத சூழ்நிலை என இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முழுமையாக நமக்கு மின்சக்தி வழங்கும் பாதையினைச் சோதனை செய்து குறைகளை நீக்க வேண்டும்.

8. சாப்ட்வேர் பிரச்னை:

பொதுவாக சாப்ட்வேர் புரோகிராம் களால் விண்டோஸ் முடக்கப்படும் நிகழ்வு ஏற்படாது. மிக அரிதான வேளைகளில் இது ஏற்படலாம். குறிப்பிட்ட சாப்ட்வேர் புரோகிராமினை இயக்கும்போது மட்டும், விண்டோஸ் இயக்கம் நின்று போகிறது என்பதனைக் கண்டறிந்தால், அந்த சாப்ட்வேர் புரோகிராமினை நீக்கி, மீண்டும் பதிவதன் மூலம் இதனைச் சரி செய்திடலாம்.

9. அதிக வெப்பம்:

கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் உறுப்புகள் இயங்குகையில் வெப்பம் உண்டாகும். இதனை நீக்கிட சிறிய மின்விசிறிகள் அமைக்கப்பட்டாலும், முழுமையாக வெப்பத்திலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களைக் காப்பாற்ற இயலாது. சில வேளைகளில் இதனாலும் விண்டோஸ் இயக்கம் முடங்கிப் போகலாம். இதனை உணரும் பட்சத்தில், கம்ப்யூட்டர் இயக்கத்தினை நிறுத்தி, வெப்பம் முழுமையாக நீங்கிய பின்னர் இயக்கிப் பார்க்கலாம். வெப்பக் காற்று வெளியேறும் வழிகளில் தூசு படிந்திருந்தால் நீக்கலாம். மின்விசிறிகள் முழுமையாக இயங்குகின்றனவா எனச் சரி பார்த்து, புதியனவற்றை அமைக்கலாம். பொதுவாக விண்டோஸ் இயக்கம் முடக்கப்பட்டவுடன், நம்மை பதற்றம் தொற்றிக் கொள்ளும், அதனை விடுத்து, பொறுமையாகக் காரணத்தை ஆய்வு செய்தாலே, பாதி வெற்றியை நாம் அடையலாம். மேலோ சொன்ன வழிகளில் நிச்சயம் ஒன்று காரணமாக இருக்கும். அதற்கேற்ற தீர்வினை மேற்கொள்வது நல்லது.

அவங்க திருந்திட்டாங்க; நாமளோ…?- குளிர்பானங்களுக்கு தடை


அவங்க திருந்திட்டாங்க; நாமளோ…?- குளிர்பானங்களுக்கு தடை



* அமெரிக்கா போடுது குளிர்பானங்களுக்கு தடை
* இந்திய இளைஞர்களோ ருசித்து குடிக்கறாங்க
* “எனக்கு ஒரு செஷ்வான் நூடூல்ஸ், ஆலு மட்டர், அத்தோடு ஒரு கோக்’ என்று ஓட்டலில் இளசுகள் ஆர்டர் செய்வது இப்போது வழக்கமாகி விட்டது.
* குறிப்பிட்ட டிபன் பாக்கேஜ்களுடன் கோக் பாட்டில் இலவசம் என்று சலுகை மெனுக்களை பல ஓட்டல்களில் காணலாம். அதற்கு செம வரவேற்பு வேறு.
* முன்பெல்லாம் சுற்றுலா சென்றால், இட்லி, சப்பாத்திகளை தயார் செய்து எடுத்துப் போவதுண்டு. இப்போதோ, கவர்ச்சி பாக்கெட்களில் உள்ள மொறுமொறுக்கள், அத்தோடு, இரண்டு லிட்டர் கூல் டிரிங்க் பாட்டில் வாங்கிவைத்தால் போதும். இப்படி, “சாப்ட் டிரிங்க்’ மோகம், இளைய தலைமுறையினரிடம் அதிகளவில் பரவி விட்டது. மற்ற உணவு வகைகளில் உள்ள கொழுப்பு சத்தை விட, கேன், பாட்டிலில் அடைக்கப்பட்ட, “கார்பன்’ ஏற்றப்பட்ட கூல் டிரிங்க்குகளில் கலோரி மிக அதிகம்.
சர்க்கரை நோய், இதய பாதிப்புக்கு இது தான் அடிப்படை காரணம். தினமும் இரண்டு சாப்ட் டிரிங்க் குடித்து வரும் இளைஞர் ஒருவர், சில ஆண்டுகளில் மிகவும் குண்டாகி விடுகிறார்; அப்புறம் என்ன, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் என்று டாக்டர்களை தேடிப் போக வேண்டியது தான்.
ஒரு நாளைக்கு 44 கிராம் தான்!
குளிர்பானம் குடிக்கக் கூடாது என்பதல்ல; ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களில் இருந்து சாறெடுத்து அப்படியே குடிப்பது நல்லது தான். ஆனால், பாட்டிலில் அடைக்கப்பட்ட, “கார்பன்’ அழுத்தம் தரப்பட்ட (கார்பனேட்டட்) கூல் டிரிங்குகள் தான் உடலுக்கு ஆபத்து.
குளிர்பானங்களில், வைட்டமின், நார்ச்சத்து போன்றவை இல்லாமல் இல்லை. ஆனால், அதையும் தாண்டி, இனிப்பு சத்து அதிகம். ஒருவர் ஒரு நாளைக்கு 44 கிராம் இனிப்பு தான் எடுத்துக்கொள்ள வேண்டும். காபி, ஜூஸ் போன்ற பல வகை உணவுகளில் இந்த அளவு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், ஒரு பாட்டில் குளிபானம் குடித்தால், அதில் இதை விட அதிகமாகவே இனிப்பு சத்து உள்ளது. ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு குளிர்பான பாட்டில் குடித்தாலே போதும், அவர் உடல் எடை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.
டீன்-ஏஜ் பெண்களுக்கும்
இளைஞர்களுக்கு குளிர்பானங்களால், உடல் எடை அதிகரித்து, சர்க்கரை அளவு கூடி விடுகிறது; ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்றால், இளம் பெண்களுக்கு எலும்பு தின்மை குறைகிறது. கால்சியம் சத்துக்களை குளிர்பானத்தில் உள்ள இனிப்பு சத்து பறித்துவிடுகிறது என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
டீன்-ஏஜ் பெண்களுக்கு அப்போது குளிர்பானம் குடிப்பது குஷியாகத்தான் இருக்கும். 40 வயதை அடையும் போது தான் மூட்டுவலியில் ஆரம்பித்து, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் போதுதான் உணர முடியும். அப்போது டாக்டரிடம் ஓடத்தான் நேரம் சரியாக இருக்கும்.
அவங்க மாறிட்டாங்க
கடந்த மூன்றாண்டாகவே, அமெரிக்காவில் பல ஆய்வுகளில் குளிர்பான அபாயம் குறித்து தகவல்கள் வெளிவந்தன. ஆனால், குளிர்பான தயாரிப்பாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் தடுத்து விட்டனர். ஆனால், குழந்தைகள் கூட பெரியவர்கள் போல குண்டாக ஆவது தெரியவந்தபோது தான் சுகாதாரத்துறை அதிர்ந்தது. இதையடுத்து பள்ளிகளில் குளிர்பானங்களுக்கு தடை போடப்பட்டது. விளைவு, இப்போது பள்ளி மாணவர்கள் 65 சதவீதம் பேர் குளிர்பானம் குடிப்பதை நிறுத்தி விட்டனர்.
இங்கே ரத்தின கம்பளம்
ஆனால், படித்த , திறமை வாய்ந்த நம் இளைஞர்கள், கேன், பாட்டில் குளிர்பானங்களில் தான் அன்றாட டிபன், சாப்பாட்டையே காண்கின்றனர். வீட்டில் சாப்பாடு செய்யவில்லை என்றால், கவலையில்லை, ஒரு இரண்டு லிட்டர் குளிர்பான பாட்டில் போதும். ஓட்டலுக்கு போனால், டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து வைப்பது வழக்கம். இப்போது, வாண்டூஸ்களுக்கு கூட, ஒரு குளிர்பான பாட்டிலோ, கேனோ வைத்தால் தான் டிபனே உள்ளே இறங்கும். அந்த அளவுக்கு மாற்றியது யாராக இருந்தாலும், பெற்றோரை தான் குறை சொல்ல வேண்டும்.
தடை இங்கே பயனில்லை
சர்க்கரை வியாதிக்கு, இதய பாதிப்புக்கு குளிர்பானம் முக்கிய காரணம் என்று தெரிந்தும், இந்தியாவில் தடை செய்ய அரசுகளுக்கு தைரியமில்லை; காரணம் சந்தை பொருளாதாரம் பாதிக்கும் என்பது தான்.
கேரளா தான் முதலில், பள்ளிகள் அருகே குளிர்பானம் விற்க தடை விதித்தது. ஆனால், அங்கும் இப்போது தலைகீழாகி விட்டது. சட்டம் போட்டால் பயனில்லை. அவரவர் திருந்த வேண்டும் என்ற நிலை தான் இப்போது உள்ளது.
திறமையா – ஒபிசிட்டியா?
நம் இளைஞர்களிடம் திறமை எக்கச்சக் கம்; அதுபோல, அமெரிக்கா எதையெல் லாம், “கெட்டது’ என்று கழற்றி விடுகிறதோ, அதையெல்லாம் வரவேற்பதும் நாம் தான். உடலை கெடுக்கும் விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் இளைஞர்களிடம் சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துவிட்டனர். திறமையா, ஒபிசிட்டியா என்பதை இளைஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்; உணராவிட்டால், காலம்தான் பதில் சொல்லும்.

கண்களைக் காக்க…

கண்களைக் காக்க…



ஐம்புலன்களானமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும். இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும்.  ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும் பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதேஇதன் வேலையாகும்.
உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று.
இந்தகண்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.எப்போதும் நீர் சூழ அமைந்துள்ள விழிகளில் சிறு தூசு பட்டாலும் அதுகண்களில் நீரை அதிகப்படுத்தி அதன்மூலம் வெளியேறிவிடுகின்றது. கண்கள்வறட்சி ஏற்படுவதைத் தடுக்க இமைகள் தானாக மூடித் திறக்கின்றன.
மனிதனின் அவசியத் தேவையான கண்களுக்கு சரியான பராமரிப்பில்லாமல் கண்கள் எளிதில் பார்வையை இழக்கின்றன.
இன்றும்கிராமங்களில் வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் பலர் கண்ணாடி அணியாமல்படிப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் ரசாயனம் கலக்காத இயற்கை உணவுகளே.
ஆனால்இன்று இரண்டு மூன்று வயது குழந்தைகள் கூட கண்ணாடி அணிந்திருப்பதைப்பார்க்கிறோம். அவசர கதியில் தயாரிக்கப்படும் இன்ஸ்டன்ட் உணவுகள்,சத்தில்லா உணவுகள், மற்றும் கண்களை பாதிக்கும் தொலைக் காட்சிப் பெட்டி,கணினி… என பட்டியல் நீளும்.
கண்பார்வைக் கோளாறு ஏற்படக் காரணம்
· உறவினர் முறையில் திருமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்படுகின்றது.
· கருவிலிருக்கும் போது குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து குறைபாட்டாலும் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது.
· சரியான உணவு உண்ணாமல் இரத்தச் சோகை ஏற்பட்டாலும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
·தூக்கமின்மையாலும், மங்கிய ஒளி அல்லது கண் கூசும் அளவு வெளிச்சம் உள்ளஇடங்களில் வேலை செய்பவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
·தற்போதைய கணினி உலகில் கண்களுக்குத் தான் அதிக வேலை உண்டாகிறது. இரவுகண்விழித்து கணினி முன் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்குறைபாடு எளிதில் உண்டாகும்.
· ஈரல் பாதிக்கப்பட்டு பித்தம்அதிகரித்தால் முதலில் தாக்கப்படுவது காண் பார்வை நரம்புகளே… இதனால்தான்காமாலை நோய்களின் அறிகுறி கண்களில் தெரியவரும்.
· மது, புகை, போதைப் பொருள்கள் உண்பவர்களின் கண்கள் எளிதில் பாதிப்படையும்.
·தொலைக்காட்சியின் முன் அமர்ந்து அதிக நேரம் தூக்கமில்லாமல்நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் கண்கள் வறட்சி கண்டு கண்பார்வை குறைபாடுஉண்டாகும்.
· நீரிழிவு நோய்க்காரர்களுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
· அடிக்கடி தலைவலி, தலைச்சுற்றல், கிறுகிறுப்பு உள்ளவர்களுக்கும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
வரும்முன் காக்க
·கண்களில் ஏதேனும் தூசு விழுந்தாலோ அல்லது வலி, ஏற்பட்டாலோ கண்மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனை யில்லாமல் கண்களுக்குமருந்துகள் இடக் கூடாது.
· அதிக வெயிலில் அல்லது வெப்பமான பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் குளிர் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும்.
· ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். நல்ல தூக்கமே கண்களைப் பாதுகாக்கும்.
·கணினியில் வேலை செய்பவர்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்யக் கூடாது. அவ்வப்போது குறைந்தது 5 நிமிடமாவது விழிகளை சுழலவிட்டுபின் கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்வதுபோல் இருக்க வேண்டும்.
· உணவில் தினமும் கீரைகள், காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரட் கண்களுக்கு மிகவும் சிறந்தது.
· எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
· மது, புகை, போதை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
· உடல் சூடு அடையாமலும், பித்த மாறுபாடு அடையாமலும் இருப்பதற்கு வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.
· மங்கலான ஒளியில் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
· அதிக வெயில் இருக்கும்போது சூரியனைப் பார்க்கக்கூடாது.
· நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
· அதிக மன அழுத்தம், டென்ஷன் கூட பார்வை நரம்புகளைப் பாதிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.