ஆன்லைன் ஷாப்பிங் செய்வேரா நீங்கள்? உஷார்.


நீங்கள் ஆன்லைனில் டிரெஸ் வாங்கும்போது முதல்ல அளவு பிரச்சனை வரக்கூடும். ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒவ்வொரு அளவு இருக்கும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் அளவுகள் வித்தியாசமாகத்தான் இருக்கும். நீங்கள் டிரெஸ் ஆர்டர் செய்றதுக்கு முன்னாடி அந்தப் பொருளைப் பற்றி மற்ற வாடிக்கையாளர்கள் தங்களோட அனுபவங்களை பற்றி சொன்னதை பாருங்க.. அதுல குறிப்பாக அளவுகளைப் பற்றி என்ன சொல்லியிருக்காங்கனு பாருங்க..

அப்புறம் ஆன்லைன் மூலமாக நீங்கள் வாங்குற பொருள் பயன்படுத்தியதாகக் கூட இருக்கலாம், அல்லது மோசமான கண்டிஷன்ல இருக்கலாம் அல்லது டேமேஜாகியும் இருக்கலாம். பெரும்பாலும் இந்த மாதிரி அனுபவங்கள் ஏற்படாத வகையில் நல்லா ஆராய்ந்து ரிட்டர் செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கா? அது ப்ரீயா? அல்லது பணம் கட்டணுமா? என்றெல்லாம் யோசிச்சுதான் ஆன்லைனில் ஆர்டர் செய்யனும்

மறைமுக கட்டணம்


Plan to shop online during the holiday season? Watch out for scams
எப்போதாவது நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்தீங்கன்னா டெலிவரி சார்ஜஸ்..அது இதுன்னு ஏகப்பட்ட கட்டணம் கறக்கப்பட்டுவிடும்... அதனால ஷிப்பிங் கட்டணம் என்னனு முழுமையாகத் தெரிஞ்சக்கனும். ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியே ஷிப்பிங் கட்டணம் எவ்வளவு? மொத்தமாக அனைத்துப் பொருள்களுக்கும் ஒரே ஷிப்பிங் கட்டணம் எவ்வளவுன்னு நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் டிஸ்கவுண்ட்ஸ் பற்றியும் கூப்பன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளனும். அதேபோல் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸையும் நல்லா தெரிஞ்சு வைச்சுக்குங்க..அதேபோல் பொருட்களை ரிட்டர்ன் கொடுக்கிறதை பற்றியும் அவசியம் தெரிஞ்சக்கனும்.. ஒருவேளை நீங்கள் ஆர்டர் கொடுத்துட்டு அப்புறம் மாற்ற முடியாமல் போய் கேன்சலும் செய்ய முடியாமலும் போகலாம். அதனால ஆன்லைன் ஷாப்பிங்கைப் பொறுத்தவரை அவசரப்பட வேண்டாம்..அதே மாதிரி ஆர்டர் பட்டனை தட்டும்போது கவனமாக இருங்க.. பொறுமையாக செயல்படுங்க.. நீங்க பாட்டுக்கு 2 தடவை ஆர்டரை தட்டிவிடப் போய் பில்லும் 2 முறை வந்துடும்..அதனால ரொம்ப கவனமாக ஆன்லைன் ஆர்டர் செய்யனும்.

கட்டணம் செலுத்துதல்
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் முடிவை எடுத்துட்டீங்கன்னா முதலில் பேமெண்ட் செலுத்துற வெப்பேஜ் எப்படி இயங்குதுன்னு பாருங்க.. பெரும்பாலும் ஆன்லைன் கட்டணங்கள் செலுத்தும் பக்கங்களில் ப்ரிவியூ ஆப்சன் இருக்கும். சப்மிட் ஆப்சனை கிளிக் செய்யுறதுக்கு முன்னாடி நல்லா பர்வியூவை பார்த்துக்குங்க... ப்ரிவியூ ஆப்சன் இல்லையா..? பேசாம வேற வெப்சைட் பக்கம் தாவிடுங்க.. அதுதான் பெஸ்ட்

அதேமாதிரி கரென்சி ரேட் என்னங்கிறதையும் ரொம்பவும் கவனமாக பார்த்துங்க..இணையத்துல எல்லா நாட்டு பணத்துக்கும் நம்ம பணத்துக்குமான மதிப்பு இருக்கும். இதுக்காகவே நிறைய கரன்சி கன்வெர்ட்டர்ஸ் இருக்கு... நீங்கள் ஆன்லைனில் பர்சேஸ் செய்யும் போது கரன்சி கன்வெர்சனுக்கு எவ்வளவு கட்டணமாகுதுங்கிறதையும் ஒப்பீட்டு பார்த்துக்கொள்வது நல்லது.

பெரும்பாலும் ஆன்லைன் நிறுவனங்கள் அனைத்துமே கொஞ்சம் கூடுதலாகவேத்தான் கன்வெர்சன் ரேட் பிக்ஸ் செய்துள்ளன என்பதை கவனத்தில் வைக்கனும்...

டெலிவரி டைம்
உலகத்தோட எந்த பகுதியில் இருந்தும் நீங்கள் ஆர்டர் செய்துவிடலாம்..ஆனால் அவங்க டெலிவரி கொடுக்க எவ்வளவு டைம் எடுத்துக்குவாங்கன்னு அவசியம் தெரிஞ்சக்கனும்..உங்ககிட்ட ஆப்சன் கேட்டால் ரொம்ப கவனமாக டெலிவரி டைமை தேர்வு செய்யுங்கள்... அதுல உங்களுக்கு சந்தேகம்னா அந்த இணையதளத்தில் இருக்கிற நபர்களுக்கு மெயில் அனுப்பி விசாரிச்சக்கனும்.. கொஞ்சம் பெரிய அளவுக்கு பர்சேஸ் பண்றதுன்னு முடிவு செஞ்சிட்டா முதலிலேயே மெயில் போட்டு விசாரிச்சுட்டு அவங்ககிட்ட இருந்து பதில் வந்ததுக்கு பிறகு ஆர்டர் கொடுக்கலாம்.. இல்லையா அடுத்த வெப்சைட்டைப் பார்க்கலாம்..

மோசடிகள்
பொதுவாகவே ஆன்லைனில் நடக்கிற கிரெடிட் கார்டு மோசடிதான் ஷாப்பிங் அனுபவத்திலும் ஏற்பட்லாஅம். அதனால் நீங்கள் பயன்படுத்துகிற வெப்சைட் நம்பகத்தன்மைக்குரியதா? என பார்த்து ஆர்டர் செய்யனும்..httpக்கு பதிலாக வெப்சைட்டில் httpsன்னு இருக்கான்னு செக் பண்ணுங்க... வெப்சைட்டில் கீழ சின்னதா ஒரு லாக் குறியீடு இருக்கான்னு பாருங்க...

நீங்க ஆன்லைனில் கிரெடிட் கார்டை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போதும் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருட்டு வளையத்துக்குள்ள சிக்குறீங்க என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவும். அதனால உங்க கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களை ஒருபோதும் இ மெயிலில் கொடுக்காதீங்க... அதே மாதிரி தனிநபர்கள் கிட்டவும் கொடுக்காதீங்க... கிரெடிட் கார்டு மோசடியில் பலரகம் இருப்பதால் ரொம்பவே எச்சரிக்கையாக இருங்க..


இதைவிட இன்னும் பெரிய பிராடும் இருக்கு.. வெப்சைட்டில் போட்டிருக்கும் பொருட்கள் கூட போலியாக இருக்கலாம்.. நீங்கள் ஆர்டர் செய்யறேன்னு சொல்லி கிரெடிட் கார்டு தகவல்களைக் கொடுக்க அந்த டுபாக்கூர் ஆட்கள் ஒருபக்கம் கிரெடிட் கார்டு தகவல்களை சுட்டுவிடுவார்கள். இப்படியும் மோசடி நடக்கிறது..உங்களுக்கு பொருளும் வராது.. கிரெடிட் கார்டு தகவலை கொடுத்து லட்சங்களை இழக்க வேண்டியதுதான். அதனால ரொம்பவே அதிகம் பயன்படுத்தக்கூடிய மிகவும் நம்பகத்தகுந்த நிறுவனங்களின் இணையதளங்களை மட்டுமே நம்புவதும் ஆர்டர் செய்வதும் அவசியம்.

ரொம்பவும் நம்பகத்தன்மையான இணையத்தளங்களிலும் கூட முழுமையாக ஆராய்ந்து பார்த்துவிட்டு ஆர்டர் செய்தால் தப்பிப்பீர்கள்.. இல்லையெனில் புலம்பத்தான் செய்ய வேண்டும்
 Thanks to One india.com

பணத்திற்கு நீங்கள் தலைவனாக இருந்தால், அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துங்கள். அதற்கு நீங்கள் அடிமையாக இருந்தால் அது உங்களைத் தீய செயல்களுக்குப் பயன் படுத்திக் கொள்ளும்.

முடங்கிப் போகும் விண்டோஸ் இயக்கம்


முடங்கிப் போகும் விண்டோஸ் இயக்கம்


Computer Problem and Solutions

விண்டோஸ் இயக்கம் நாம் எதிர்பாராத நேரங்களில், தொடர்ந்து இயங்க முடியாமல், முடங்கிப் போகும் வாய்ப்புகள் சில வேளைகளில் ஏற்படுவதுண்டு. இதற்குக் காரணம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப் பொதுவாகக் குற்றம் சாட்ட முடியாது. வேறு பல காரணங்களாலும் இது ஏற்படலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.மெமரி மதர்போர்ட் பிரச்னை:

கம்ப்யூட்டர் முடங்கிப் போய், நீல வண்ணத்தில் திரை மாறுவதற்கான காரணங்களில், முதன்மையாக இருப்பது, மெமரி அல்லது மதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளே. இதனை Fatal Exception Error என அழைக்கின்றனர். மெமரியில் ஸ்டோர் செய்யப்பட்ட டேட்டாவினை, மீண்டும் பெற முடியாத பிரச்னையே இது.

2.பயாஸ் செட்டிங்ஸ்:

பொதுவாக மதர்போர்டுகள் தயாரிக்கப்படும் இடத்திலேயே, அனைத்து வகை டிஜிட்டல் இயக்கத்திற்கும், இணைப்பிற்கும் தயாராக இருக்கும் வகையிலேயே வடிவமைக்கப் படுகின்றன. பெர்சனல் கம்ப்யூட்டரில் அவை இணைக்கப் படுகையில், கம்ப்யூட்டர் தயாரிப்பவரால், மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பின் தனிநபராகிய பயனாளரால், அவருக்கான பயாஸ் மெமரியில் இவை பதிவு செய்யப்பட்டு அமைக்கப்படுகின்றன. பயாஸ் மெமரியில் பதிவு செய்யப்பட்டவை, அதற்கு மின் சக்தி வழங்கும் சீமாஸ் பேட்டரியின் மூலம் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும். இந்த பேட்டரி தன் சக்தியை இழக்கும் போது, பயாஸ் தன் பழைய, பேக்டரி செட்டிங்ஸ் நிலைக்குத் திரும்புகிறது. அப்போது, கம்ப்யூட்டரை வடிவமைத்தவர் மற்றும் பயனாளர் அமைத்த செட்டிங்ஸ் இல்லாமல், கம்ப்யூட்டர் மதர்போர்டுக்கும், இணைக்கப் பட்டுள்ள சாதனங்களுக்கும் இடையே இயக்க பிரச்னை ஏற்படுகிறது. மேலும் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், முதலில் சிடி அல்லது யு.எஸ்.பி. ட்ரைவில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தேடி இயங்கட்டும் என செட்டிங்ஸ் அமைத்து, அவற்றில் சிஸ்டம் இல்லை என்றாலும், கம்ப்யூட்டர் பூட் செய்வதில் பிரச்னை ஏற்படும்.

3.விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி:

கம்ப்யூட்டர் இயக்கம் முழுமைக்குமான குறியீட்டு வரிகள் எழுதப்பட்டுள்ள தொகுப்பே விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி. இப்போது இயங்கும் கம்ப்யூட்டர்களில், ரெஜிஸ்ட்ரி தொகுப்பில் முன்பு போல பிரச்னை ஏற்படுவதில்லை. இருப்பினும், இதன் குறியீட்டு வரிகளில் சிக்கல் ஏற்பட்டால், விண்டோஸ் இயக்கம் தொடங்குவதிலும், தொடர்ந்து இயங்குவதிலும் பிரச்னை ஏற்படும். இவ்வாறு பிரச்னைகள் ஏற்பட்டால், சரி செய்வதற்கென பல சாப்ட்வேர் தொகுப்புகள் கிடைக்கின்றன. இவை Registry Fix Software என அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் சரியாக இயங்கவில்லை எனில், அதனைப் பாதுகாப்பான வழியான சேப் மோடில் (Safe Mode) இயக்கி, அதிலிருந்தே புரோகிராம்களை இயக்கிப் பார்க்கலாம்.

4.மாறிப் போன ட்ரைவர்கள்:

ஹார்ட்வேர் சாதனங்கள் எப்படி செயல்பட வேண்டும் என கட்டளை கொடுப்பவை ட்ரைவர் புரோகிராம்களாகும். அவை சரியாக இயங்கவில்லை என்றால், நிச்சயம் விண்டோஸ் இயக்கம் முடங்கிப் போகும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகையில், நமக்கு ஒரு எர்ரர் மெசேஜ் (Error Message) கிடைக்கும். இந்த பிழைச் செய்தியில் எங்கு பிரச்னை உள்ளது எனக் காட்டப்படும். இது புரியவில்லை என்றால், அதனை அப்படியே காப்பி செய்து, கூகுள் தேடல் தளத்தில் ஒட்டி தேடினால், அந்த பிரச்னை குறித்த விளக்கமும், அதனைத் தீர்க்க என்ன செய்திட வேண்டும் என்ற வழிகாட்டலும் கிடைக்கும். அதனைப் பின்பற்றலாம். பிரச்னை தொடர்ந்து ஏற்பட்டால், குறிப்பிட்ட ட்ரைவர் புரோகிராமினை, சிஸ்டத்திலிருந்து நீக்கி, மீண்டும் அதன் மேம்படுத்தப்பட்ட ட்ரைவர் புரோகிராமினைப் பதிவது சரியான தீர்வாகும்.

5. ஹார்ட் ட்ரைவ் தரும் பிரச்னை:

ஹார்ட் ட்ரைவ்களில் ஏற்படும் பழுதுகளால், விண்டோஸ் முடங்கிப் போவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். பயாஸ் புரோகிராம் சரியாக வடிவமைக்கப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டர், ஹார்ட் ட்ரைவில் பூட் செய்யக்கூடிய பகுதியைத் தேடி அறிய முடியவில்லை எனில், இதற்குக் காரணம் ஹார்ட் ட்ரைவாகத்தான் இருக்க முடியும். பொதுவாக, இவற்றில் பதிந்துள்ள பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கும் போதுதான், ஹார்ட் ட்ரைவில் பிரச்னை இருப்பது தெரியவரும். இலவசமாக ஹார்ட் ட்ரைவினை சோதித்து முடிவுகளைத் தரும் புரோகிராம்கள், இணையதளங்களில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி, சோதனை செய்து, கிடைக்கும் அறிக்கையில் தவறு உள்ளது என முடிவு கிடைத்தால், உங்கள் ஹார்ட் ட்ரைவ் தன் மரணத்தைச் சந்திக்க இருக்கிறது என்று பொருள். எப்படியாவது சரி செய்து, அதில் உள்ள டேட்டாவினை மீள எடுத்துவிட்டு, ட்ரைவினை அழித்துவிடுவதே நல்லது. அதற்கு முன், அந்த ட்ரைவினை இன்னொரு கம்ப்யூட்டரில் இணைத்து , இயக்கிப் பார்க்கலாம். அதில் சரியாக இயங்கினால், மீண்டும் சோதனை நடத்திப் பார்த்து முடிவெடுக்கலாம். ட்ரைவ் சரியாக உள்ளது என சோதனை முடிவுகள் தெரிவித்தால், பிரச்னை கம்ப்யூட்டரின் பிற பகுதிகளில் உள்ளதா எனத் தேடிப் பார்க்க வேண்டும்.

6.வைரஸ் அல்லது மால்வேர்:

ஒரு வைரஸ் அல்லது மால்வேர் எனப்படும் கம்ப்யூட்டர் இயக்கத்தினைக் கெடுக்கும் புரோகிராம்களும், கம்ப்யூட்டரை முடக்கிப் போடலாம். இவை ட்ரைவர் புரோகிராம்களைக் கெடுக்கலாம்; அல்லது நீக்கலாம். முக்கியமான சிஸ்டம் பைல்களை அழிக்கலாம்; அல்லது கம்ப்யூட்டர் இயக்கத்தினை நிர்வகிக்க நாம் அமைத்திருக்கும் செட்டிங்குகளை மாற்றலாம். இவை எல்லாமே நாம் எதிர்பாராத நேரத்தில், கம்ப்யூட்டரை முடக்கிப் போடலாம்.
வெளிப்படையாக ஓர் உண்மையைச் சொல்வதென்றால், ஒரு மால்வேர் புரோகிராம் இருப்பதனை அறியும் போதே, அதற்கு எதிரான போராட்டத்தில் நாம் தோல்வி அடைந்து நிற்கிறோம். உங்கள் சிஸ்டத்தினை அது கைப்பற்றிவிட்ட நேரத்திலிருந்து, வழக்கமாக நம் பெர்சனல் கம்ப்யூட்டரின் பிரச்னைகளை அறிய நாம் மேற்கொள்ளும் வழிகளும் அடைப்பட்டுப்போகின்றன. எனவே, புதியதாக ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை, டவுண்லோட் செய்து அல்லது மற்றவர்களிடமிருந்து பெற்று, இன்ஸ்டால் செய்து இயக்கி அதனை நீக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். என்ன செய்தும் அதனை நீக்க இயலவில்லை என்றால், ட்ரைவில் உள்ள பைல்களுக்குப் பேக் அப் எடுத்துவிட்டு, ஹார்ட் ட்ரைவினை பார்மட் செய்து, விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் பதிக்க வேண்டியதுதான். இதனால் தான், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, அவ்வப்போது மேம்படுத்த வேண்டும் என்றும், சரியான பயர்வால் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும் என்றும், நம் டேட்டா பைல்களை அவ்வப்போது பேக் அப் எடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்படுகிறது.

7. மின்சக்தி பிரச்னை:

மேலே சொல்லப்பட்ட பிரச்னைகள் எதுவும் இல்லை என்றால், கம்ப்யூட்டருக்கு வழங்கப்படும் மின்சக்தி ஓட்டத்தில் பிரச்னை இருக்கலாம். போதுமான மின்சக்தி இல்லாத நிலை, சமநிலையில் மின் ஓட்டம் கிடைக்கப்பெறாத சூழ்நிலை என இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முழுமையாக நமக்கு மின்சக்தி வழங்கும் பாதையினைச் சோதனை செய்து குறைகளை நீக்க வேண்டும்.

8. சாப்ட்வேர் பிரச்னை:

பொதுவாக சாப்ட்வேர் புரோகிராம் களால் விண்டோஸ் முடக்கப்படும் நிகழ்வு ஏற்படாது. மிக அரிதான வேளைகளில் இது ஏற்படலாம். குறிப்பிட்ட சாப்ட்வேர் புரோகிராமினை இயக்கும்போது மட்டும், விண்டோஸ் இயக்கம் நின்று போகிறது என்பதனைக் கண்டறிந்தால், அந்த சாப்ட்வேர் புரோகிராமினை நீக்கி, மீண்டும் பதிவதன் மூலம் இதனைச் சரி செய்திடலாம்.

9. அதிக வெப்பம்:

கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் உறுப்புகள் இயங்குகையில் வெப்பம் உண்டாகும். இதனை நீக்கிட சிறிய மின்விசிறிகள் அமைக்கப்பட்டாலும், முழுமையாக வெப்பத்திலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களைக் காப்பாற்ற இயலாது. சில வேளைகளில் இதனாலும் விண்டோஸ் இயக்கம் முடங்கிப் போகலாம். இதனை உணரும் பட்சத்தில், கம்ப்யூட்டர் இயக்கத்தினை நிறுத்தி, வெப்பம் முழுமையாக நீங்கிய பின்னர் இயக்கிப் பார்க்கலாம். வெப்பக் காற்று வெளியேறும் வழிகளில் தூசு படிந்திருந்தால் நீக்கலாம். மின்விசிறிகள் முழுமையாக இயங்குகின்றனவா எனச் சரி பார்த்து, புதியனவற்றை அமைக்கலாம். பொதுவாக விண்டோஸ் இயக்கம் முடக்கப்பட்டவுடன், நம்மை பதற்றம் தொற்றிக் கொள்ளும், அதனை விடுத்து, பொறுமையாகக் காரணத்தை ஆய்வு செய்தாலே, பாதி வெற்றியை நாம் அடையலாம். மேலோ சொன்ன வழிகளில் நிச்சயம் ஒன்று காரணமாக இருக்கும். அதற்கேற்ற தீர்வினை மேற்கொள்வது நல்லது.

அவங்க திருந்திட்டாங்க; நாமளோ…?- குளிர்பானங்களுக்கு தடை


அவங்க திருந்திட்டாங்க; நாமளோ…?- குளிர்பானங்களுக்கு தடை



* அமெரிக்கா போடுது குளிர்பானங்களுக்கு தடை
* இந்திய இளைஞர்களோ ருசித்து குடிக்கறாங்க
* “எனக்கு ஒரு செஷ்வான் நூடூல்ஸ், ஆலு மட்டர், அத்தோடு ஒரு கோக்’ என்று ஓட்டலில் இளசுகள் ஆர்டர் செய்வது இப்போது வழக்கமாகி விட்டது.
* குறிப்பிட்ட டிபன் பாக்கேஜ்களுடன் கோக் பாட்டில் இலவசம் என்று சலுகை மெனுக்களை பல ஓட்டல்களில் காணலாம். அதற்கு செம வரவேற்பு வேறு.
* முன்பெல்லாம் சுற்றுலா சென்றால், இட்லி, சப்பாத்திகளை தயார் செய்து எடுத்துப் போவதுண்டு. இப்போதோ, கவர்ச்சி பாக்கெட்களில் உள்ள மொறுமொறுக்கள், அத்தோடு, இரண்டு லிட்டர் கூல் டிரிங்க் பாட்டில் வாங்கிவைத்தால் போதும். இப்படி, “சாப்ட் டிரிங்க்’ மோகம், இளைய தலைமுறையினரிடம் அதிகளவில் பரவி விட்டது. மற்ற உணவு வகைகளில் உள்ள கொழுப்பு சத்தை விட, கேன், பாட்டிலில் அடைக்கப்பட்ட, “கார்பன்’ ஏற்றப்பட்ட கூல் டிரிங்க்குகளில் கலோரி மிக அதிகம்.
சர்க்கரை நோய், இதய பாதிப்புக்கு இது தான் அடிப்படை காரணம். தினமும் இரண்டு சாப்ட் டிரிங்க் குடித்து வரும் இளைஞர் ஒருவர், சில ஆண்டுகளில் மிகவும் குண்டாகி விடுகிறார்; அப்புறம் என்ன, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் என்று டாக்டர்களை தேடிப் போக வேண்டியது தான்.
ஒரு நாளைக்கு 44 கிராம் தான்!
குளிர்பானம் குடிக்கக் கூடாது என்பதல்ல; ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களில் இருந்து சாறெடுத்து அப்படியே குடிப்பது நல்லது தான். ஆனால், பாட்டிலில் அடைக்கப்பட்ட, “கார்பன்’ அழுத்தம் தரப்பட்ட (கார்பனேட்டட்) கூல் டிரிங்குகள் தான் உடலுக்கு ஆபத்து.
குளிர்பானங்களில், வைட்டமின், நார்ச்சத்து போன்றவை இல்லாமல் இல்லை. ஆனால், அதையும் தாண்டி, இனிப்பு சத்து அதிகம். ஒருவர் ஒரு நாளைக்கு 44 கிராம் இனிப்பு தான் எடுத்துக்கொள்ள வேண்டும். காபி, ஜூஸ் போன்ற பல வகை உணவுகளில் இந்த அளவு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், ஒரு பாட்டில் குளிபானம் குடித்தால், அதில் இதை விட அதிகமாகவே இனிப்பு சத்து உள்ளது. ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு குளிர்பான பாட்டில் குடித்தாலே போதும், அவர் உடல் எடை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.
டீன்-ஏஜ் பெண்களுக்கும்
இளைஞர்களுக்கு குளிர்பானங்களால், உடல் எடை அதிகரித்து, சர்க்கரை அளவு கூடி விடுகிறது; ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்றால், இளம் பெண்களுக்கு எலும்பு தின்மை குறைகிறது. கால்சியம் சத்துக்களை குளிர்பானத்தில் உள்ள இனிப்பு சத்து பறித்துவிடுகிறது என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
டீன்-ஏஜ் பெண்களுக்கு அப்போது குளிர்பானம் குடிப்பது குஷியாகத்தான் இருக்கும். 40 வயதை அடையும் போது தான் மூட்டுவலியில் ஆரம்பித்து, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் போதுதான் உணர முடியும். அப்போது டாக்டரிடம் ஓடத்தான் நேரம் சரியாக இருக்கும்.
அவங்க மாறிட்டாங்க
கடந்த மூன்றாண்டாகவே, அமெரிக்காவில் பல ஆய்வுகளில் குளிர்பான அபாயம் குறித்து தகவல்கள் வெளிவந்தன. ஆனால், குளிர்பான தயாரிப்பாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் தடுத்து விட்டனர். ஆனால், குழந்தைகள் கூட பெரியவர்கள் போல குண்டாக ஆவது தெரியவந்தபோது தான் சுகாதாரத்துறை அதிர்ந்தது. இதையடுத்து பள்ளிகளில் குளிர்பானங்களுக்கு தடை போடப்பட்டது. விளைவு, இப்போது பள்ளி மாணவர்கள் 65 சதவீதம் பேர் குளிர்பானம் குடிப்பதை நிறுத்தி விட்டனர்.
இங்கே ரத்தின கம்பளம்
ஆனால், படித்த , திறமை வாய்ந்த நம் இளைஞர்கள், கேன், பாட்டில் குளிர்பானங்களில் தான் அன்றாட டிபன், சாப்பாட்டையே காண்கின்றனர். வீட்டில் சாப்பாடு செய்யவில்லை என்றால், கவலையில்லை, ஒரு இரண்டு லிட்டர் குளிர்பான பாட்டில் போதும். ஓட்டலுக்கு போனால், டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து வைப்பது வழக்கம். இப்போது, வாண்டூஸ்களுக்கு கூட, ஒரு குளிர்பான பாட்டிலோ, கேனோ வைத்தால் தான் டிபனே உள்ளே இறங்கும். அந்த அளவுக்கு மாற்றியது யாராக இருந்தாலும், பெற்றோரை தான் குறை சொல்ல வேண்டும்.
தடை இங்கே பயனில்லை
சர்க்கரை வியாதிக்கு, இதய பாதிப்புக்கு குளிர்பானம் முக்கிய காரணம் என்று தெரிந்தும், இந்தியாவில் தடை செய்ய அரசுகளுக்கு தைரியமில்லை; காரணம் சந்தை பொருளாதாரம் பாதிக்கும் என்பது தான்.
கேரளா தான் முதலில், பள்ளிகள் அருகே குளிர்பானம் விற்க தடை விதித்தது. ஆனால், அங்கும் இப்போது தலைகீழாகி விட்டது. சட்டம் போட்டால் பயனில்லை. அவரவர் திருந்த வேண்டும் என்ற நிலை தான் இப்போது உள்ளது.
திறமையா – ஒபிசிட்டியா?
நம் இளைஞர்களிடம் திறமை எக்கச்சக் கம்; அதுபோல, அமெரிக்கா எதையெல் லாம், “கெட்டது’ என்று கழற்றி விடுகிறதோ, அதையெல்லாம் வரவேற்பதும் நாம் தான். உடலை கெடுக்கும் விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் இளைஞர்களிடம் சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துவிட்டனர். திறமையா, ஒபிசிட்டியா என்பதை இளைஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்; உணராவிட்டால், காலம்தான் பதில் சொல்லும்.

கண்களைக் காக்க…

கண்களைக் காக்க…



ஐம்புலன்களானமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும். இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும்.  ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும் பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதேஇதன் வேலையாகும்.
உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று.
இந்தகண்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.எப்போதும் நீர் சூழ அமைந்துள்ள விழிகளில் சிறு தூசு பட்டாலும் அதுகண்களில் நீரை அதிகப்படுத்தி அதன்மூலம் வெளியேறிவிடுகின்றது. கண்கள்வறட்சி ஏற்படுவதைத் தடுக்க இமைகள் தானாக மூடித் திறக்கின்றன.
மனிதனின் அவசியத் தேவையான கண்களுக்கு சரியான பராமரிப்பில்லாமல் கண்கள் எளிதில் பார்வையை இழக்கின்றன.
இன்றும்கிராமங்களில் வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் பலர் கண்ணாடி அணியாமல்படிப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் ரசாயனம் கலக்காத இயற்கை உணவுகளே.
ஆனால்இன்று இரண்டு மூன்று வயது குழந்தைகள் கூட கண்ணாடி அணிந்திருப்பதைப்பார்க்கிறோம். அவசர கதியில் தயாரிக்கப்படும் இன்ஸ்டன்ட் உணவுகள்,சத்தில்லா உணவுகள், மற்றும் கண்களை பாதிக்கும் தொலைக் காட்சிப் பெட்டி,கணினி… என பட்டியல் நீளும்.
கண்பார்வைக் கோளாறு ஏற்படக் காரணம்
· உறவினர் முறையில் திருமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்படுகின்றது.
· கருவிலிருக்கும் போது குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து குறைபாட்டாலும் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது.
· சரியான உணவு உண்ணாமல் இரத்தச் சோகை ஏற்பட்டாலும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
·தூக்கமின்மையாலும், மங்கிய ஒளி அல்லது கண் கூசும் அளவு வெளிச்சம் உள்ளஇடங்களில் வேலை செய்பவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
·தற்போதைய கணினி உலகில் கண்களுக்குத் தான் அதிக வேலை உண்டாகிறது. இரவுகண்விழித்து கணினி முன் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்குறைபாடு எளிதில் உண்டாகும்.
· ஈரல் பாதிக்கப்பட்டு பித்தம்அதிகரித்தால் முதலில் தாக்கப்படுவது காண் பார்வை நரம்புகளே… இதனால்தான்காமாலை நோய்களின் அறிகுறி கண்களில் தெரியவரும்.
· மது, புகை, போதைப் பொருள்கள் உண்பவர்களின் கண்கள் எளிதில் பாதிப்படையும்.
·தொலைக்காட்சியின் முன் அமர்ந்து அதிக நேரம் தூக்கமில்லாமல்நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் கண்கள் வறட்சி கண்டு கண்பார்வை குறைபாடுஉண்டாகும்.
· நீரிழிவு நோய்க்காரர்களுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
· அடிக்கடி தலைவலி, தலைச்சுற்றல், கிறுகிறுப்பு உள்ளவர்களுக்கும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.
வரும்முன் காக்க
·கண்களில் ஏதேனும் தூசு விழுந்தாலோ அல்லது வலி, ஏற்பட்டாலோ கண்மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனை யில்லாமல் கண்களுக்குமருந்துகள் இடக் கூடாது.
· அதிக வெயிலில் அல்லது வெப்பமான பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் குளிர் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும்.
· ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். நல்ல தூக்கமே கண்களைப் பாதுகாக்கும்.
·கணினியில் வேலை செய்பவர்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்யக் கூடாது. அவ்வப்போது குறைந்தது 5 நிமிடமாவது விழிகளை சுழலவிட்டுபின் கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்வதுபோல் இருக்க வேண்டும்.
· உணவில் தினமும் கீரைகள், காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரட் கண்களுக்கு மிகவும் சிறந்தது.
· எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
· மது, புகை, போதை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
· உடல் சூடு அடையாமலும், பித்த மாறுபாடு அடையாமலும் இருப்பதற்கு வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.
· மங்கலான ஒளியில் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
· அதிக வெயில் இருக்கும்போது சூரியனைப் பார்க்கக்கூடாது.
· நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
· அதிக மன அழுத்தம், டென்ஷன் கூட பார்வை நரம்புகளைப் பாதிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :


பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :

பிராய்லர் கோழி தற்போது கிலோ 180rs க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ?

பிறந்து 55நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...

இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120rs-இல் இருந்து 40rs நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் , இவர்களின் திட்டத்தின் படி 180rs என்று விலையை உயர்த்தி , பிறகு 120rs என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர் 

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது,,, மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் ... .ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக்கொள்கின்றனர்.... 

நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION எவ்வளவோ முயற்ச்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது ..... 

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!



ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?

மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.

கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.

நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.

'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது...
பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :

பிராய்லர் கோழி தற்போது கிலோ 180rs க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ?

பிறந்து 55நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...

இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120rs-இல் இருந்து 40rs நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் , இவர்களின் திட்டத்தின் படி 180rs என்று விலையை உயர்த்தி , பிறகு 120rs என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது,,, மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் ... .ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக்கொள்கின்றனர்....

நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION எவ்வளவோ முயற்ச்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது .....

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!



ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?

மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.

கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.

நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.

'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது...

டைப் 2 டயபடீஸ்: இதோ ஒரு புது பூதம் குட்டீஸ்களையும் தாக்குகிறது


டைப் 2 டயபடீஸ்: இதோ ஒரு புது பூதம் குட்டீஸ்களையும் தாக்குகிறது


* “வாரத்திற்கு ஒரு முறை தானே, ஓட்டலில் பிட்சா, பர்கர் சாப்பிட்டால் பரவாயில்லை; ஒன்றும் செய்யாது; நீ சும்மா இரு, குழந்தைங்க நல்லா சாப்பிடறதே அதிசயம்…’ என்று வாதிப்பவரா?
* நீங்கள் மணிக்கணக்கில் சீரியல் பார்த்தால், அவங்களும் “டிவி’ யில் சினிமா, காமெடி என்று ஏதாவது பார்க்கத்தான் செய்வர்.
* கண்டபடி சாப்பிடும் பல குழந்தைகளுக்கு உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே மறந்து போய் விட்டது.
* சாப்பிட்டபின் தண்ணீர் குடி…ன்னு எத்தனை தடவை சொல்லியாச்சு; கேட்டாத்தானே…என்று நொந்து கொள்பவரா?
இப்படிப்பட்ட சூழல், பல குடும்பங்களில் வாடிக்கையாகி வருகிறது. இந்த குடும்பங்களில் இருந்து வளரும் குழந்தைகள் தான் “ஒபிசிட்டி’ என்ற குண்டாகும் நிலைக்கு ஆளாகின்றனர்; சில குடும்பங்களில், அடுத்த சில ஆண்டுகளில் இளம் வயதினருக்கே பி.பி.,சர்க்கரை நோய் என்ற பாதிப்பு நுழைந்து விடுகிறது.
விழிப்பு இல்லை இன்னும்
ஷுகர், டயபடீஸ் என்று சொல்லப்படும் சர்க்கரை நோய் தீவிரம் பற்றி பலருக்கும் இன்னும் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தான் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனரே தவிர, பாதிப்பின் அறிகுறிகளுடன் உள்ளவர்களுக்கு தெரிவதில்லை.
டயபடீஸ் என்பது இப்போது உலகம் முழுக்க “டைம் பாம்’ மாதிரி பரவி வருகிறது. நாற்பது வயதை தாண்டியவர்களை தாக்கும் டைப் 2 டயபடீஸ்; அதுபோல, குழந்தைகளை தாக்கக் கூடியது டைப் 1 டயபடீஸ். ஆனால், சமீப காலமாக 25 ஐ தாண்டியவர்களுக்கே டைப் 2 டயபடீஸ் நோய் வர ஆரம்பித்து விட்டது. எல்லா நாடுகளிலும் அதிகரித்துள்ள டயபடீஸ் நோயாளிகளில் 30 சதவீதம் பேர் இந்த வயதினர் என்று கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கும் டைப் 2
குழந்தைகளுக்கு பொதுவாக டைப் 1 டயபடீஸ் தான் வரும். ஆனால், சில மாதங்களாக, அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல நாடுகளில், குழந்தைகளை டைப் 2 டயபடீஸ் தாக்கி வருவது மருத்துவ நிபுணர்களை அதிர வைத்துள்ளது. ஜப்பானிய பள்ளிக்குழந்தைகளுக்கு டைப் 2 டயபடீஸ் வந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. டைப் 1 ஐ விட, டைப் 2 ஏழு மடங்கு அதிக வேகத்தில் குழந்தைகளை பாதிக் கிறது என்றும் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
என்ன தான் காரணம்?
கடந்த ஐந்தாண்டில் நம் வாழ்க்கை முறை, உணவு முறை, உடற்பயிற்சி நிலை எல்லாம் மாறி விட்டது. இயந்திரமயம் வந்துவிட்டது. மனித உழைப்பு குறைந்துவிட்டது. உடலுக்கு தேவையில்லாத உணவு வகைகள் புகுந்துவிட்டன. வயது வித்தியாசம் பாராமல் பிட்சா, பர்கர் போன்ற “ஜங்க் புட்’ உணவு வகைகளை சாப்பிடுவது அதிகரித்து வந்தது. இதன் விளைவு தான் இப்போது குட்டீஸ்களும் இந்த “குப்பை’ உணவுகளில் நாட்டம் கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டு விட்டு, மணிக் கணக்கில் “டிவி’ மற்றும் கம்ப் யூட்டர் கேம் விளையாடுகின்றனர். ஓடி விளையாடுவது, உடற் பயிற்சி செய்வது போன்றவை அறவே இல்லாமல் போய்விட்டது. சத்தான உணவும் போச்சு; சீரான உடற்பயிற்சியும் போச்சு; இதன் விளைவு தான் டைப் 2 சர்க்கரை நோயும் குழந்தைகளை பாதிக்க ஆரம்பித்து விட்டது.
புரிந்து கொள்ளுங்கள்
நாம் உண்ணும் உணவுகளில் உள்ள எரிசக்தி, சீரான அளவில் ரத்தத்தில் கலந்து சத்துக்களை பல உறுப்புகளுக்கும் அனுப்ப வேண்டும்.
இந்த எரிசக்தியைத் தான் குளூக்கோஸ் கொண்டுள்ளது. இந்த குளூக்கோஸ் தான் சர்க்கரை என்று சொல்லப்படுகிறது. ரத்தத்தில் குளூக்கோசை எரிசக்தியாக மாற்றுவது இன்சுலின் என்ற சுரப்பி தான். கணையத்தில் உள்ள இந்த சுரப்பி சரியான அளவில் சுரந்து, குளூக்கோசை எரிசக்தியாக மாற்றி ரத்தத்தில் கலக்கும்; அதிகமாக கலக்காமலும் பார்த்துக்கொள்ளும். ஆனால், சிலருக்கு கணையத்தில் இந்த சுரப்பியில் இருந்து போதுமான இன்சுலின் சுரக்காது; அப்படியே சுரந்தாலும் அது வேலை செய்வதில் சிக்கல் இருக்கும். அப்படி இருந்தால் ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படாமல் அதிகரித்து விடும். இது தான் டைப் 2 டயபடீஸ் என்பது.
கணையத்தில் உள்ள இன் சுலின் சுரப்பி, இன்சுலினை சுரக்கவே செய்யாது. இதனால், ஊசி மூலம்,மருந்து மூலம் தான் இன்சுலினை பெற முடியும். இந்த பாதிப்பு தான் டைப் 1 டயபடீஸ். குழந்தைகளுக்கு மட்டும் தான் இந்த பாதிப்பு வரும்.
எதிர்காலத்தில்
இதுவரை டைப் 1 தான் குழந்தைகளுக்கு வந்து கொண்டிருக்கிறது; இப்போது டைப் 2 டயபடீசும் வர ஆரம்பித்து விட்டது. அப்படியானால், அடுத்த சில ஆண்டுகளில் டயபடீஸ் 2 நோயாளிகளில் குழந்தைகளும் கணிசமாக இருப்பர் என்பது தான் நிபுணர்கள் கவலை. டயபடீஸ் என்பதே எதிர்பாராமல் வெடிக்கும் “டைம் பாம்’ தான். அதைக் கட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும். பாதிப்பு வந்த பின் தான் பலருக்கும் தெரிகிறது.
இப்போது புதிதாக வெடிக்கக் காத்திருக்கும் புது “டைம் பாம்’ அடுத்த சில ஆண்டுகளில் பயத்தை ஏற்படுத்தத்தான் போகிறது.

இதைத் தொடாதீங்க…!-எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்


நமது உடம்பின் எரிபொருள் உணவுதான். எனவே நீங்கள் சாப்பிடுவது, நாள் முழுவதும் உங்கள் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில உணவுகள் உங்களுக்குள் உற்சாகத்தை பாய்ச்சுவதைம், சில உணவுகள் உங்களைத் தொய்ந்துபோக வைப்பதையும் உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டுமானால் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்…
சர்க்கரை அளவைக் கூட்டும் உணவுகள்
உங்களுக்கு `ஸ்வீட்’ சாப்பிடும் ஆசை அதிகமா? அது, `தடுக்கபட்ட’ உணவுகளில் உங்களைக் கொண்டுபோய் விட்டுவிடக் கூடும். உதாரணமாக, தித்திபான இனிப்பு, `கேக்’ போன்றவை. அவை உங்களின் உற்சாகத்தை உயர்த்துகின்றன என்பது உண்மைதான். ஆனால் அது தற்காலிகமானது. பீட்சா, ஒயிட் பிரெட் சாட்விச், சாக்லேட் மற்றும் இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது உங்களின் ரத்த சர்க்கரை அளவைக் கூட்டி உற்சாக அளவில் ஒரு தாவலை ஏற்படுத்தும்.

சட்டென்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவது உங்களின் முளையின் உஷார்த்தன்மையைக் கூட்டும். ஆனால் சர்க்கரை அளவு குறையக் குறைய நீங்கள் தளர்ந்து போய் விடுவீர்கள்.
மாற்று
மேற்கண்டவற்றுக்கு பதிலாக, வேதிபொருட்கள் சேர்க்காத பனைவெல்லத்துடன் எள், பாதாம்பருப்பு, பரங்கி விதை ஆகியவற்றுடன் முழுக்கோதுமை அல்லது பல தானிய ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடுங்கள்.
பொரித்த உணவுகள்

அதிகமான கொலஸ்ட்ராலும், கொழுப்பும் உங்களை பொரித்த உணவுகளிலிருந்து விலக்காவிட்டால், இதோ இன்னும் ஒரு காரணம். சிஸ், பக்கோடா, பஜ்ஜி போன்றவை செரிமானம் ஆவதற்கு ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் ஆகிறது. செரிமானத்தின்போது உடம்பின் அதிகமான சக்தி அதற்கே செலவாவதால், அப்போது நாம் சோம்பலாக உணர்வோம்.
மாற்று
சோயா செறிந்த நொறுக்குத் தீனிகள், டோக்லா, ரவா இட்லி போன்றவற்றைச் சாப்பிடுங்கள்.
உற்சாக முட்டும் பானங்கள்
உற்சாகமுட்டும் பானங்கள் (எனர்ஜி டிரிங்ஸ்) பல அவற்றில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் `காபீனால்’ உடனடி சக்தியை அளிக்கின்றன. ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்தச் சக்தி வடியத் தொடங்கிவிடும். அப்போது நீங்கள் மேலும் தளர்ந்தவராக ஆகிவிடுவீர்கள். பரீட்சைக்கு படிக்கும்போது விழித்திருப்பதற்காக உற்சாக முட்டும் பானங்களை பருகுவோர் விஷயத்தில் இது தெளிவான உண்மை. உற்சாகமுட்டும் பானங்கள் ஆரம்பத்தில் `காபீனின்’ உதவியால் முளைச் சக்தியைக் கூட்டும். ஆனால் சற்று நேரத்துக்கு பின் நீங்கள் சுத்தமாகக் களைத்து போய்விடுவீர்கள்.
மாற்று
உங்களுக்கு பிடித்த எந்த பழத்தைம் யோகர்ட் சேர்த்துச் சாப்பிடுங்கள். ஒரு பெரிய கிளாசில் பழச்சாறு அருந்தலாம். இளநீர், கரும்புச் சாறு, எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றையும் பருகலாம்.
பதபடுத்திய உணவுகள்
கிரீம் பிஸ்கட்டுகள், நுடுல்ஸ், உப்பிட்ட உருளைக்கிழங்கு சிஸ், கிரீம் நிறைந்த சாலட், வெண்ணை வழியும் பீட்சா ஆகியவற்றில் நிறைய சோடியம்
உள்ளது. சோடியமானது தண்ணீரை ஈர்த்துக் கொள்வதால் அவை `டீஹைட்ரேஷன்’, அமைதியற்ற நிலை, எளிதாக எரிச்சலுக்குள்ளாகும் தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். பதபடுத்திய உணவுகளின் தயாரிப்பின்போது அவை அதிக நாள் கெடாமல் இருபதற்காக `ஹைட்ரேஷன் பிராசஸுக்கு’ உட்படுத்தபடுகின்றன. அவை பல்வகை `டிரான்ஸ்பேட்ஸை’ ஏற்படுத்துகின்றன. இந்தக் கொழுப்புகளைச் சாப்பிடுவது, குறிபிடத்தக்க அளவு சக்தியைக் குறைக்கும்.
மாற்று
வறுத்த தானியங்களை சாபிடலாம்.
காபி
நாம் `டல்’லாக உணரும்போது சூடாக ஒரு `கப்’ காபி சாபிடலாம் என்று நினைப்போம்- அது உடனடியாகத் தெம்பூட்டும் என்ற எணத்தில். ஒரு கோப்பை `ஸ்ட்ராங்’ காபி உங்களை விழிப்பாக வைத்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அது சிறிது நேரத்துக்குத்தான்.

காபியில் உள்ள `காபீன்’, உங்களின் உள்ளமைப்பைத் தூண்டி சோர்வை விடுவிக்கிறது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அது அடிமைத்தன்மையை ஏற்படுத்திவிடும்.
அதிகமாகக் காபி பருகுவது எலும்புகளில் கால்சியம் அளவைக் குறைக்கும், தூக்கத்தைத் தொந்தரவு படுத்தும். நீண்ட இடைவேளைக்கு இடையே கொஞ்சம் கொஞ்சம் காபி சாப்பிடுவது நல்லது.
மாற்று
`லெமன் டீ’ அல்லது காய்கறி சூப் சாபிடுங்கள்.