அரசு அதிகாரிகள்உணர்வார்களா : அனைவரும் காணவேண்டிய வீடியோ
இது ஒரு குறும்படம் .அரசு அதிகாரிகளும் மக்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது .
இது ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப் பட்டுள்ளதால் புரிந்து கொள்ள வசதியாக வீடியோவில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகளை தமிழில் தருகிறேன் .
மின் வாரிய அதிகாரிக்கு ஒரு தொலைப் பேசி அழைப்பு வருகிறது
அழைத்தவர் : அய்யா நான் கணேஷ் நகர் மூன்றாவது சந்திலிருந்து பிரசாந்த் பேசுறேன் ...எங்க ஏரியாவுல நாலஞ்சி நாளா தெரு விளக்கு எரியல சார் ....
அதிகாரி : இதுக்கு முன்னாடி வேற யார்கிட்டாயாவுது புகார் சொல்லியிருக்கீங்களா ?
அழைத்தவர் : பல தடவை சொல்லியாச்சி சார் ...நாலு நாள் ஆவுது இது வரைக்கும் யாரும் வரல .....
அதிகாரி : அரசு அதிகாரிகளுக்கு பல வேலைகள் இருக்கும் அதனால் எதையும் உடனடியாக செய்து விடமுடியாது
அழைத்தவர் : எங்க ஏரியா ரொம்ப நெரிசலான இடம் சார்... எல்லாருமே ரொம்ப சிரமப் படுறோம் ...தயவு செஞ்சி கொஞ்சம் சீக்கிரமா பாருங்க சார் ....
அதிகாரி : சரி செய்கிறோம்
சிறிது நேரத்தில் ஒரு மின்வாரிய ஊழியர் வந்து தெரு விளக்கை சரி செய்கிறார் .சரி செய்தவுடன் அருகிலுள்ள ஒரு பூத்திலிருந்து மேலதிகாரிக்கு தகவல் தெரிவிக்கிறார்
மின் வாரிய ஊழியர் :ஹலோ ..சூரி சாரா ..நான் பார்த் பேசுறேன் ...லைட்ட சரி பண்ணியாச்சி ...ரொம்ப சின்ன ரிப்பேர்தான் ...ஒரு நிமிஷத்துல முடிஞ்சிடுச்சி
இப்போது பூத் உரிமையாளர் மின்வாரிய ஊழியரிடம் கேட்கிறார்
பூத் உரிமையாளர் : லைட்டு இப்போ நல்லா எரியுதா சார் ?
மின் ஊழியர் : ஆம் ...நல்லா எரியுது .....எவனோ தெரியல நாலஞ்சி நாளா லைட்டு எரியலன்னு அடிக்கடி போன் பண்ணி ஒரே இம்சை ...
பூத் உரிமையாளர் :உங்களுக்கு இம்சை குடுத்த அந்த முட்டாள் இப்போ உங்க முன்னாடிதான் சார் இருக்கான் ...
மின் ஊழியர் :ஓ ..நீங்கதானா அது ...சரி போன் பேசியதற்கு காசு எவ்வளவு ?
பூத் உரிமையாளர் : காசெல்லாம் வேண்டாம் சார் எங்க தெருவுக்கு எவ்வளவு பெரிய நன்மை செஞ்சிருக்கீங்க ...
மின் ஊழியர் : இது என் காசு டையாதுய்யா ...அரசாங்கத்தோடது ... சும்மா வாங்கிக்க ...
மின் ஊழியர் : ஏம்யா ...உனக்கு கண் தெரியாதா ?