கையில் கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால்
நம்மவர்களுக்கு உள்ளங்கை அரிக்கத்தொடங்கி விடும்…..அடியேனுக்கும் அப்படி அரிக்கவே
பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்து ஒரு பிரபலமான பங்குத்தரகு
நிறுவனத்தை நாடியபோது Demat account, Hike, Slow down அது இது என ஆங்கிலத்தில்
நான் இது வரை அறியாதவற்றை எல்லாம் கூறி எப்படியோ முதலீடு செய்யும் எண்ணத்தை எனக்கு
உருவாக்கி விட்டனர்….
எனது பங்குச்சந்தை ஆசையை நண்பர்
ஒருவரிடம் பகிர்ந்துகொண்டபோது என்னை ஏற இறங்க பார்த்த அந்த நண்பர் “ஒரு குட்டிக்கதை
சொல்கிறேன், அதைக் கேட்டுவிட்டு பின் ஒரு முடிவுக்கு வா”
என்றார்….
ஆங்கிலத்தில் அவர் சொன்ன கதையை நம்ம
பாட்டி ஸ்டைலில் மொழிபெயர்த்திருக்கிறேன்…
அந்தக்கதை……
ஒரு ஊரிலே ஒரு பெரிய வியாபாரி
வந்து தங்கி இருந்தாரு. அவர் ஒரு நாளு அந்த ஊருல இருக்குற எல்லார் கிட்டேயும் ஒரு
அறிவிப்பு செஞ்சாரு.அதாவது அவர் குரங்கு வியாபாரம் பண்ணப்போறதாவும் ஊருல இருக்குற
எல்லாரும் அவர் கிட்டேகுரங்கு பிடுச்சு குடுக்கலாம்னும், அப்படி குடுக்கற ஒவ்வொரு
குரங்குக்கும் அவர் 10 ரூபாய் குடுக்கறதாகவும் சொன்னாரு..
இத கேட்ட ஊரு மக்கள், அவங்களால
முடிஞ்ச அளவுக்கு காட்டுல போய் குரங்குபுடுச்சி இந்த வியாபாரி கிட்டே குடுத்து காசு
வாங்கிகிட்டாங்க. கிட்ட தட்டஒரு வாரம் ஆச்சு.. எல்லாருக்கும் குரங்கு பிடிக்கறதுல
நாட்டம் குறைஞ்சிபோச்சு..
இப்ப அந்த வியாபாரி, ஒவ்வொரு
குரங்குக்கும் 20 ரூபாய் குடுக்கறதா சொன்னாரு… உடனே எல்லாருக்கும் ஆர்வம் வந்து
திருப்பியும் காட்டுக்கு போய் முடிஞ்ச அளவு குரங்கு பிடிச்சு அந்த வியாபாரி கிட்டே
குடுத்து பணம் வாங்கிகிட்டாங்களாம் .
இப்படியே ரெண்டு வாரம் போச்சு..
ஊருல ஒருகுரங்கு கூட இல்ல.. காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. எல்லாம் அந்த
வியாபாரி கிட்டே தான் இருந்துச்சு.. இப்போ அந்த வியாபாரி சொன்னாராம்..நான் ஊருக்கு
போயிட்டு வரேன்.. வரும் பொது இன்னும் நிறைய குரங்கு பிடிச்சு குடுங்க.. அப்படி
பிடிக்கற குரங்குக்கு.. இந்த வாட்டி 50 ரூபாய் குடுக்கறேன்னு… நான் வர வரைக்கும்
இந்த பிடிச்ச குரங்க எல்லாம் பாத்துக்க என்னோட P.A. வை விட்டுட்டு போறேன்னு
சொன்னாராம்.
மக்களுக்குஎல்லாம் அப்படியே
Tension ஆயிடுச்சு.. என்னடா இது இப்போ ஊருலேயும் ஒரு குரங்குகூட இல்ல… காட்டுலேயும்
ஒரு குரங்கு கூட இல்ல..
இப்ப பாத்து இந்த வியாபாரி 50
ரூபாய் குடுக்கறேன்னு சொல்லறாரே… என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு
இருந்தாங்களாம்..அப்போ பாத்து அந்த வியாபாரியோட P.A வந்து ஊரு மக்கள் கிட்டே
சொன்னாராம்.. இங்க பாருங்க..
உங்களுக்கோ பிடிக்க குரங்கு இல்ல..
இங்க நீங்க பிடிச்சு வெச்ச குரங்கு எல்லாம் பத்திரமா என்கிட்டதான் இருக்கு.. என்
முதலாளி வர்ரதுக்குள்ள இந்த குரங்கை எல்லாம் 35 ரூபாய்க்கு வாங்கிக்கோங்க.. அவர்
வந்தவுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடுங்கன்னு
சொன்னாராம்..
திருப்பியும்… ஊர் மக்கள் எல்லாம் அவங்க பிடிச்சு குடுத்த குரங்கையே
35 ரூபாய்க்கு வாங்கினாங்களாம்.. சரி நமக்கு எதுவும் நஷ்டம் இல்லையே.. எப்படியும்
அந்த முதலாளி வந்த வுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடலாம்என்ற
எண்ணத்தோட…
இப்போ ஊருக்கு போன முதலாளியும்
திரும்ப வரல.. அவரோட P.A. வும் எஸ்கேப்பு….